Wednesday, September 19, 2018

#பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு #கதை

வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954 – மே 17[1] அல்லது மே 18[2] 2009) தமிழீழ விடுதலைப் புலிகள்இயக்கத்தின் தலைவர் ஆவார். 

1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார்.





1975ல்தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

Lanka7; ராஜீவ் காந்தி என் படுகொலை செய்யப்பட்டார்?

ராஜீவ் காந்தி, இந்தியாவின் ஆறாவது பிரதமர் ஆவார். இவர் 21 மே 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.



 அதில் 14 நபர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. இவர் விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

பிக் பாஸ்: கொஞ்சம் நியாயமாக விளையாடலாமா ஐஸ்வர்யா யாஷிகா? 10 மணிநேரத்திற்கு முன்பு

பிக் பாஸ்: கொஞ்சம் நியாயமாக விளையாடலாமா ஐஸ்வர்யா யாஷிகா?




இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டு ஞாபக மறதி டாஸ்கில், ஐஸ்வர்யா சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற போட்டியாளர்கள் அவரது நினைவாற்றலை பார்த்து கலங்கி போனார்கள்.


மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கு இடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் தற்போது வைல்ட் கார்டு போட்டியாளருடன் சேர்த்து 6 பேர் உள்ளனர்.

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் டாஸுகுகள் மிகவும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்று ஞாபக மறதி டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

பத்து சுற்றுகள் முடிவில் ஜனனி, ஐஸ்வர்யா 230 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். யஷிகா, பாலாஜி இருவரும் குறைந்த புள்ளிகளுடன் தோல்வி அடைந்தனர். ரித்விகா மற்றும் விஜயலட்சுமி ஒருவாராக சமாளித்து டாஸ்கை முடித்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் பிக்பாஸ் கேட்டுக்கொண்டதன் படி, போட்டியாளர்கள் இதுவரை பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட நல்ல அனுபவங்கள், மோசமாக தருணங்களை மற்றவர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொண்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்புவதற்காக காலம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் போட்டிகளை கடுமையாக்கி வருகிறார். இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில் ஹவுஸ்மேட்ஸ் மிகுந்த நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்,




Lanka7: இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு

பஸ் கட்டணங்கள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளன.

அதன்படி, பஸ் கட்டணங்கள் 4 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக தனியார் பஸ் சங்கங்களுடன் போக்குவரத்து அமைச்சில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற விசேட கலந்துரையாடாலை தொடர்ந்து அமைச்சர் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, குறைந்தபட்ச பஸ் கட்டணமான 12 ரூபாயில் மாற்றம் ஏற்படாது என்றும், ஏனைய கட்டணங்கள் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு, தனியார் பஸ் உரிமையாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையில் இந்த கட்டண அதிகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Lanka7: புதிர் வினா விடைகள்.

01) தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
1) ஓட்டை     
2) மீன்வலை
3) கரண்டி 
4) கடல்
02) முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கைத் தேவை?
1) கஸ்ட்டம்
2) ஆறுதல்
3) ஆபத்து
4) பயம்
03) முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை. கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்? இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண். மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
1) பார்வை
2) கனி
3) கவிதை
4) கண்மணி
4) பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
1) கண்கள்
2) முட்டை
3) மீன்
4) கடல்
5) அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
1) சக்தி
2) சூரியன்
3) நிலா
4) பூமி
06) ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க,சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க,ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
1) குரங்கு
2) மூச்சு
3) கடவுள்
4) மனிதன்
07) நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில் பெண்கள் விருப்பம், அது என்ன?
1) புடவை
2) பட்டு
3) நகை
4) ஆபரணம்
08) கடையெழுத்து மாறிடில் தின்னலாம்,முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும்,மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள் இங்கே?
1) காசி
2) பழனி
3) கனி
4) திருச்செந்தூர்
09) கடைசி வார்த்தையில் மானம் உண்டு,முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?
1) அணிகலன்
2) துணி
3) ஆடை
4) பட்டுத்துணி
10) அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
1) நீர்
2) நெல்
3) சோறு
4) அரிசி
11) வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?
1) கத்தரிக்கோல்
2) நண்பர்
3) பகைவர்
4) கத்தி
12) ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?
1) விளக்கு
2) துடைப்பம்/தும்புத்தடி
3) பேனா
4)பாத்திரம்
13) ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன?
1) கற்பூரம்
2) விளக்கு
3) மெழுகுதிரி
4) ஊதுபத்தி
14) மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?
1) பஞ்சு
2) நுங்கு
3) வெண்மை
4) வாழை
5) எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
1) வைரக்கல்
2) விக்கல்
3) சிகிச்சை
4) மணல்
16) ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம் அது என்ன?
1) வீடு
2) கோயில்
3) தேன்கூடு
4) கூடு
17) பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
1) மீன்
2) வாத்து
3) தவளை
4) பாம்பு
18) படுத்துத் தூங்கினால் கண்முன் ஆடும்,அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும் அது என்ன?
1) நுளம்பு
2) கனவு
3) மனிதன்
4) வானம்
19) இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
1) பலா
2) மா
3) வாழை
4) தோடை
20) அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
1) நாய்
2) பூனை
3) அரசன்
4) நாக்கு
21) ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம் அந்த குகை எது?
1) குளம்
2) கிணறு
3) வாய்
4) மாதுளம்பழம்
22) விரல் இல்லாமலே ஒரு கை அது என்ன?
1) மனித கை
2) உலக்கை
3) விலங்குகளின் கை
4)வானம்
23) நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்?
1) நாற்காலி
2) வாங்கில்
3) மேசை
4) வீடு
24) மரத்தின் மேலே தொங்குது மலைப் பாம்பல்ல. அது என்ன?
1) காய்
2) பூ
3) இலை
4) விழுது
25) முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது,படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
1) நிலா
2) நட்சத்திரங்கள்
3) வானம்
4) முகில்
26) அரசன் ஆளாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன், இரவுக் காவல்காரன் ஒருவன் அவர்கள் யார்?
1) பூமி, சந்திரன்
2) சூரியன், புதன்
3) சூரியன்,சந்திரன்
4) பூமி, சூரியன்
27) பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன?
1) கணினி
2) வானொலிப் பெட்டி
3)தொலைக்காட்சி
4) தொலைநகல்
28) நான் பார்த்தால் அவன் பார்ப்பான், நான் சிரித்தால் அவன் சிரிப்பான் அவன் யார்?
1) வானம்
2) நிழல்
3) கோமாளி
4) முகம் பார்க்கும் கண்ணாடி
29) கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்?
1) வெங்காயம்
2) மிளகாய்
3) மாம்பழம்
4) வாழை
30) தனித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை. அது என்ன?
1) கறி
2) சோறு
3) உப்பு
4) சீனி
31) கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
1) வெங்காயம்
2) தோடம்பழம்
3) கரும்பு
4)தேசிக்காய்
32) உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன?
1) நீர்
2) இளநீர்
3) கடல்
4) மாம்பழம்
33) வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ அது என்ன?
1) ரோஜாபூ
2) மல்லிகைப்பூ
3) பூ
4) சிரிப்பு
34) எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?
1) மீன்
2) சிலந்தி
3) நண்டு
4) வாத்து
35) ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?
1) கண்ணீர்
2) அருவி
3) ஆறு
4) கிணறு
36) கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?
1) நெருப்பு
2) விளக்கு
3) மெழுகுதிரி
4) அனல்
37) ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன?
1) பற்கள்
2) பூக்கொத்து
3) மாதுளம்பழம்
4)மாம்பழம்
38) வெள்ளி ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது?
1) மான்
2) முட்டை
3) மீன்
4) கண்
39) மருத்துவர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு அவர் யார்?
1) இலையான்
2) நுளம்பு
3) மான்
4) சிங்கம்
40) ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான் அவன் யார்?
1) நாய்
2) செருப்பு
3) பூனை
4) அட்டை
41) வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை அது என்ன?
1) மிளகாய்
2) பயறு
3) உழுந்து
4) நெல்
42) தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன?
1) கை
2) முதுகு
3) பூ
4) காய்
43) பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்?
1) சீப்பு
2) கல்
3) பல்
4) முகப்பூச்சு
44) ஐந்து வீட்டிற்க்கு ஒரு முற்றம் அது என்ன?
1) வீட்டுமுற்றம்
2) வாசல்
3)கதவு
4) உள்ளங்கையும் விரல்களும்
45) தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்?
1) வாழைப்பழம்
2) பனம்பழம்
3) தேங்காய்
4)பாக்கு
46) தட்டச் சீறும் அது என்ன?
1) தீக்குச்சி
2) மெழுகுதிரி
3) நாய்
4) சிங்கம்
47) வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?
1) வாழ்க்கை
2) வழுக்கை
3)உலக்கை
4) பொக்கை
48) காற்றைக் குடித்து காற்றில் பறப்பான்,அவன் யார்?
1) விமானம்
2) பறவை
3) பலூன்
4) குருவி
49) பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்?
1) காகம்
2) குருவி
3) கிளி
4) கோழி
50) அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன?
1) பாக்கு வெற்றிலை
2) அம்மி குளவி
3) கை கால்
4) மலை மடு
51) வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை அது என்ன ?
1) விருந்தினர்
2) மாணவர்
3) செருப்பு
4)அன்பளிப்பு
52) ஓயாமல் இரையும் இயந்திரமல்ல,உருண்டோடி வரும் பந்தும் அல்ல அது என்ன?
1) குட்டை
2) கடல்
3) குளம்
4) கிணறு
53) மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல,பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல அவன் யார் ?
1) குயில்
2) தேவாங்கு
3) உடும்பு
4) அணில்
54) வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி அவர்கள் யார்?
1) கதவும் தச்சனும்
2) முதலாளியும் நாயும்
3) பூட்டும் சாவியும்
4) கடலும் நீரும்
55) எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன ?
1) வானம்
2) மின்விசிறி
3) காகிதம்
4) காற்று
56) உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு அது என்ன ?
1) பாய்
2) பாம்பு
3) அட்டை
4) தடி
57) மழை காலத்தில் குடை பிடிப்பான் அவன் யார் ?
1) வளி
2) தொப்பி
3) காளான்
4) காற்று
58) யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும் அது என்ன ?
1) மரக்கதவு
2) கண் இமை
3) யன்னல்
4) வாசல்
59) அடிக்காமல்,திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார் ?
1) தடி
2) சவுக்கு
3) காயம்
4) வெங்காயம்
60) வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார் ?
1) ஆறு
2) குளம்
3) கடல்
4) கிணறு
61) கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான் அவன் யார்?
1) வெருளி
2) சிலந்தி
3) அட்டை
4) பாம்பு
62) அள்ள அள்ளக் குறையாது ஆனால் குடிக்க உதவாது அது என்ன ?
1) கடல்நீர்
2) வாளி
3) கயிறு
4) தீர்த்தம்
63) முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம் அது என்ன?
1) கரும்பு
2) மாதுளம்பழம்
3) பலாப்பழம்
4) முட்டை
64) வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார் ?
1) நாய்
2) தபாற் பெட்டி
3) வாகனம்
4) மரம்
65) முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார் ?
1) மாங்காய்
2) சிவபெருமான்
3)பலாப்பழம்
4) தேங்காய்
66) மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார் ?
1) மீனவன்
2) சிலந்தி
3) மீன்
4) சிலை
67) உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார் ?
1) பானை
2) காகம்
3) அகப்பை
4) நீர்
68) எட்டாத ராணி இரவில் வருவாள். பகலில் மறைவாள் அவள் யார் ?
1) சூரியன்
2) வானம்
3) நிலா
4) காற்று
69) வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை. அது என்ன ?
1) தீக்குச்சி
2) தடி
3) மரம்
4) மேசை
70) சலசலவென சத்தம் போடுவான் சமயத்தில் தாகம் தீர்ப்பான் அவன் யார் ?
1) நீர்
2) கடல்
3) அருவி
4) தாகம்
71) காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன?
1) நாவல் பழம்
2) மாம்பழம்
3) தேங்காய்
4) பனை
72) தாடிக்காரன், மீசைக்காரன். கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன?
1) தேங்காய்
2) அரிசி
3) சக்கரை
4) சட்டி
73) ஒரு கிணற்றில் ஒரே தவளை அது என்ன ?
1) காகம்
2) நாக்கு
3) மூக்கு
4) பேன்
74) வால் உள்ள பையன், காற்றில் பறக்கிறான் அது என்ன ?
1) நூல்
2) பறவை
3) பட்டம்
4) விமானம்
75) ஆனை விரும்பும், சேனை விரும்பும்,அடித்தால் வலிக்கும், கடித்தால் சுவைக்கும் அது என்ன ?
1) சீனி
2) மூங்கில்
3) வெல்லம்
4) கரும்பு
76) பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?
1) மிளகாய்
2) காசு
3) அன்னாசி
4) மாதுளம்பழம்
77) கண்ணுக்குத் தெரியாதவன் உயிருக்கு உகந்தவன் அவன் யார் ?
1) பேய்
2) காற்று
3) தூசு
4) நீர்
78) தலையைச் சீவினால் தாளிலே மேய்வான் அவன் யார்?
1) வெண்கட்டி
2) பேனா
3) பென்சில்
4) ஆடு
79) சுற்றுவது தெரியாது ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான் அவன் யார் ?
1) வானம்
2) பூமி
3) பம்பரம்
4) காற்றாடி
80) வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல் அது என்ன ?
1) பல்
2) பலாப்பழம்
3) முட்டை
4) மிளகாய்
81) குதிரை ஓட ஓட வால் குறையும். அது என்ன?
1) குதிரை
2) ஊசி நூல்
3) தும்பி
4) நாய்
82) பூக்கும், காய்க்கும், வெடிக்கும். ஆனால் பழுக்க மட்டும் செய்யாது. அது என்ன?
1) இலவம்பஞ்சு
2) விளாம்பழம்
3) முந்திரி
4)பப்பாளி
83) எல்லா வித்தையும் தெரிந்தவன். தெரியாதவன் போல் பாவனை செய்கிறான். அவன் யார்?
1) புத்திசாலி
2) வித்தகன்
3) அறிஞன்
4) கோமாளி
84) ஆடி ஆடி நடப்பான், அரங்கதிர வைப்பான். அவன் யார்?
1) கழுதை
2) யானை
3) சிங்கம்
4) புலி
85) அடிப்பக்கம் மத்தளம், இலை பர்வதம்,குலை பெரிது, காய் துவர்ப்பு, பழம் தித்திப்பு. அது என்ன?
1) மாமரம்
2) வாழைமரம்
3) பலாமரம்
4) மாதுளை
86) ஒருவனுக்கு உணவளித்தால் ஊரையே கூட்டுவான். அவன் யார்?
1) காகம்
2) நாய்
3) புறா
4) பூனை
87) எங்க வீட்டுத் தோட்டத்திலே தொங்குதே ஏகப்பட்ட பச்சைப் பாம்புகள். அது என்ன?
1) மிளகாய்
2) பாகற்காய்
3) புடலங்காய்
4)கத்தரிகாய்
88) "உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்" அது என்ன?
1) நரகம்
2) பிரம்பு
3) தராசு
4) காவல்காரன்
89) "ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது" அவர்கள் யார்?
1) மனிதர்கள்
2) யானைக் கூட்டம்
3) எறும்புக் கூட்டம்
4) மான் கூட்டம்
90) "உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்" நான் யார்??
1) கழுதை
2) அஞ்சல் பெட்டி
3) குதிரை
4) மாடு

Lanka7 விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியனின் போட்டோஷூ

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்ஸ்..!










photography vikadan

lanka7

Tuesday, September 18, 2018

சாவகச்சேரி நிதி நிறுவனம் ஒன்றில் கத்தி முனையில் துணிகரத்திருட்டு

சாவகச்சேரி நிதி நிறுவனம்  ஒன்றில் கத்தி முனையில் துணிகரத்திருட்டு நேற்று இரவு சாவகச்சேரி நிதி நிறுவனம் ஒன்றில் கத்தி முனையில் திருட்டு இடம்பெற்றுள்ளது பல லட்சங்கள் திருடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன..

Bigg Boss Tamil 2: Host Kamal Haasan confirms extension of the show,

Kamal Haasan, the host of the reality show has confirmed the extension of

Bigg Boss Tamil season 2


 for a few days. There were rumours that the show might get extended. Putting an end to all those rumours,

Kamal Haasan clarified that
Bigg Boss Tamil season 2 is getting extended to 105 days.


Kamal has asked the housemates to get mentally prepared in order to stay in the Bigg Boss house for few more days. According to sources, Bigg Boss Tamil season 2 will have its final episode on September 30.

Kamal Haasan kicked off the Bigg Boss Tamil season 2 on June 17, 2018. The reality show started with 16 contestants along with Bigg Boss Tamil season 1 contestant

Oviya making their entry into the house.

Mumtaz got recently evicted from the house. Mumtaz was one of the most controversial contestants of this season. The housemates alleged that she showed lack of interest in household chores during her stay in the house. She reportedly didn't follow the orders from Bigg Boss too.


There are 6 inmates left in the house including
Bhalajie,Janani Iyer,Yashika Anand
 Aishwarya Dutta, wildcard entrant
Vijayalakshmi and Riythvika Among them, Janani Iyeralone has won the ticket to the finale.

Body of golf star Celia Barquin Arozamena found on course in Iowa,



  
A man has been charged with murder following the discovery of a champion golfer's body on a US course.

Police say Iowa State University golfer Celia Barquin Arozamena, who was found on Monday, died after being repeatedly stabbed.

Officers have charged 22-year-old Collin Daniel Richards, of no known address, with first-degree murder.



Prosecutors say Richards was living in a tent in a temporary camp near the course and had told an acquaintance about his "urge to rape and kill a woman."

Emergency services were called to Coldwater Golf Links in Ames, Iowa, at about 10.20am local time after players on the course found an abandoned golf bag.

Ms Barquin Arozamena's body was found some distance away, police said.

Originally from Puente San Miguel, Spain, Ms Barquin Arozamena,22, was the Iowa State female athlete of the year and was finishing a civil engineering degree

Paying tribute, they said she was one of the most accomplished players in the history of the Cyclones, the university golf team,

Iowa State president Wendy Wintersteen said in a statement on Twitter that she was "deeply saddened to learn of the tragic death".

She described Ms Barquin Arozamena as a "dedicated civil engineering student" and an "acclaimed golfer with a bright future."

Ranked number 69 nationally by Golfweek, Ms Barquin Arozamena became the second women's golfer at Iowa State to earn medallist honours at a conference tournament when she claimed the 2018 Big 12 Championship in April.

She became the third Cyclone women's golfer to compete in the US Women's Open Championship, the university said.


by lanka7news

Monday, September 17, 2018

Bigboss-2 குடும்ப உறுப்பினர்கள் சில உண்மை?


Bigboss-2 குடும்ப உறுப்பினர்கள் சில உண்மை?

01- யாஷிகா ஆனந்த், நடிகை, துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்துள்ளார்.

02- பொன்னம்பலம், நடிகர், பல தமிழ்த்திரைப்படங்களில் முன்னணி வில்லன் நடிகராக நடித்துள்ளார்.

03-மஹத் ராகவேந்திரா, நடிகர், மங்காத்தா, ஜில்லா ஆகியபடங்களில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.

04- டேனியல் ஆன்னி போப், நடிகர், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரங்கூன் ஆகியபடங்களில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.

05- வைஷ்ணவி, ஊடகவியலாளர், தமிழ் எழுத்துலக ஜாம்பவான்களில் ஒருவராகிய சாவியின் பேத்தி, ரேடியோ மிர்ச்சியில் வானொலி ஒலிபரப்பாளராக உள்ளார்.

06-ஜனனி, நடிகை, இவர் தெகிடி, அதே கண்கள் போன்ற படங்களில் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார்.

07- அனந்த் வைத்தியநாதன், குரல் நிபுணர், விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஜூனியர்/சீனியர் நிகழ்ச்சிகளின் குரல் பயிற்சியாளரக உள்ளார்.

08- ரம்யா என்.எஸ்.கே.., பின்னணிப் பாடகர், தந்தைவழியில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. ஏ. மதுரம் ஆகியோரின் பேத்தி, தாய்வழியில் கே. ஆர். ராமசாமியின்பேத்தி.

09- சென்றாயன், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்.

10-   ரித்விகா, நடிகை, மெட்ராஸ், கபாலிஆகியபடங்களில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.

11 மும்தாஜ், நடிகை, பல தமிழ் படங்களில் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார்.

12- தாடி பாலாஜி, நடிகர், பல தமிழ்த்திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார், விஜய் டிவி-இல் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் நடுவர்.

13- மமதி ச்சாரி, நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர் போன்ற முகங்களைக் கொண்டவர்.

14- நித்யா, தாடி பாலாஜியின் மனைவி.

15- ஷாரிக் ஹாஸன், நடிகர் மற்றும் தடகள வீரர், ரியாஸ் கான், உமா ரியாஸ் கான் ஆகியோரின் மகன். மற்றும்பென்சில் (2016) திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

16- ஐஸ்வர்யா தத்தா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஈழ போர்க்களம் என்பது .

 இலங்கை [ ஈழப் போர்] உள்நாட்டுப் போர். என்பது

இலங்கை இனப்பிரச்சினை  காரணமாக  தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட  இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும்  இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது.

இப்போரானது சிங்களவருக்கும்,  தமிழருக்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து முரண்பாடுகளின் மூலத்தைக் கொண்டதாகும். 23 யூலை 1983 முதல் 26 ஆண்டுகள் போர் நடைபெற்ற

இப்போர் 2009 இல் விடுதலைப் புலிகள் தோற் கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.

எமது செய்திகளை தொடர இதனை கிளிக் பண்ணவும்
Lanka7

Jaffnanews:யாழ் வலிகாமத்தில் உள்ள ஊர்கள்?


யாழ் வலிகாமத்தில் உள்ள ஊர்கள்?
யாழ்ப்பாணம்
உடுவில்
சுன்னாகம்
சங்குவேலி
நல்லூர்
திருநெல்வேலி
மானிப்பாய்
கோண்டாவில்
கொக்குவில்
கந்தரேடை
மல்லாகம்
சன்டிலிப்பாய்
சங்கானை
வட்டுக்கோட்டை
அராலி
தெல்லிப்பளை
சுழிபுரம்
சில்லாலை
சரசலை
இளவலை
மாவிட்டபுரம்
கிரிமலை
கங்கேசதுறை
பலாலி
குரும்சிட்டி
வசாவிவிளான்
மூளாய்
புத்தூர்
நீர்வேலி
உரும்ராய்
அரியாலை
கரந்தன்
குப்பிளான்
ஏழாலை
நவலி
மாதகல்
கொழும்புத்துறை
வண்ணார்பண்ணை
கோப்பாய்
ஆனைக்கோட்டை
ஊரெழு
அச்செழு

jaffnanews;தென்மராட்சி என்பது என்ன ?

தென்மராட்சி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் நான்கு பெரும் பிரிவுகளுள் ஒன்று. ஏனையவை வடமராட்சி, வலிகாமம், தீவகம் ஆகியன.

தென்மராட்சிக்கு மேற்கே வலிகாமமும், வடக்கே வடமராட்சியும்,  தெற்கே   யாழ்ப்பாணக் கடலேரியும்,   கிழக்கே கிளிநொச்சி மாவட்டத்தின்

 ஒரு பிரிவான பச்சிலைப்பள்ளியும் உள்ளன.

தென்மராட்சியின் தலைநகரம்  சாவகச்சேரி. சாவகச்சேரி நகரம் சாவகச்சேரி நகர சபையினால் நிர்வாகம் செய்யப்படுகிறது.

கைதடி,வரணி,மட்டுவில்,கொடிகாமம்
கச்சாய் போன்றவை தென்மராட்சியில் ஊரில் உள்ளது,



எமது செய்திகளை தொடர இதனை கிளிக் பண்ணவும்
Lanka7


Jaffnanews:வடமராட்சி என்பது என்ன?

வடமராட்சி (Vadamaraadchi அல்லது Vadamarachchi)   என்பது  இலங்கையின்வட முனையில்அமைந்துள்ள  யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஒரு புவியியற் பிரிவாகும்.

அண்ணளவாக 1262 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்ட யாழ்ப்பாணக் குடாநாடு, குடியேற்றவாத ஆட்சிக்காலங்களுக்கு முன்பிருந்தே  வலிகாமம், வடமராட்சிதென்மராட்சி,  பச்சிலைப்பள்ளி என நான்கு பிரிவுகளாகப்   பிரிக்கப்பட்டிருந்தது.

குடாநாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது வடமராட்சிப் பிரிவாகும்.

jaffnanews;வலிகாமம் என்பது என்ன?

வலிகாமம், இலங்கையின் வட முனையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள ஒரு புவியியற் பிரிவாகும்.

அண்ணளவாக 1262 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்ட யாழ்ப்பாணக் குடாநாடு, குடியேற்றவாத ஆட்சிக்காலங்களுக்கு முன்பிருந்தே வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

இவற்றுள் முக்கியமானது குடாநாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள வலிகாமம் பிரிவாகும்.

இதன் வடக்கே இந்து மாகடலும், மேற்கே தீவுப் பகுதிக்கும், குடாநாட்டுக்கும் இடையிலான கடல்பகுதியும், தெற்கில் யாழ்ப்பாணக் கடல்நீரேரியும், எல்லைகளாக அமைந்திருக்கத் தெற்கில் ஒருபகுதியில் தென்மராட்சிப் பிரிவும், கிழக்கில் வடமராட்சிப் பிரிவும் அமைந்துள்ளன.

குடாநாட்டின் வளம் மிக்க பகுதிகள் பெரும்பாலும் வலிகாமப் பகுதியிலேயே அமைந்துள்ளன.

யாழ்ப்பாண அரசுக் காலத்திலிருந்தே இப் பகுதி, ஒப்பீட்டளவில் அதிக மக்கள் தொகையைக் கொண்டதாகவும், மக்கள் அடர்ந்து வாழும் பகுதியாகவும் விளங்கி வந்திருக்கிறது.

பண்டைக்காலத்தில் முக்கிய நகரமாக விளங்கியதாகக்கருதப்படும் கதிரைமலை எனஅழைக்கப்படும் கந்தரோடையும், பிற்கால யாழ்ப்பாண அரசின் தலைநகரமான நல்லூரும், தற்கால வடமாகாணத்தின் தலைமை நகரமான யாழ்ப்பாணமும் வலிகாமப் பிரிவிலேயே உள்ளன.

Lanka7:யாழ் மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள்தொகுப்பு

யாழ் மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள்தொகுப்பு

ஊர்காவற்றுறை
சங்கானை
சண்டிலிப்பாய்
தெல்லிப்பழை
உடுவில்
கோப்பாய்
கரவெட்டி
மருதங்கேணி
பருத்தித்துறை
சாவகச்சேரி
நல்லூர்
யாழ்ப்பாணம்
வேலணை
நெடுந்தீவு

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவும் ஒரு பிரதேச செயலாளரின் கீழ் செயல்படுகின்றது.

இந்தத் துணைப் பிரிவுகளும் மேலும் 434 கிராம சேவை அலுவலர் பிரிவுகளாகப்பிரிக்கப்பட்டுள்ளன.

தொகுப்பு அனு

Lanka7news : யாழ்ப்பாண மாவட்டம்

யாழ்ப்பாண மாவட்டம் (Jaffna District) இலங்கையின் 25 மாவட்டங்களில்  ஒன்று.

இதுநாட்டின் வடக்கேஅமைந்துள்ளது. மேற்கில் மன்னார் வளைகுடாவும், வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், தெற்கில் யாழ்ப்பாணக் கடல்நீரேரியாலும்சூழப்பட்டுள்ளது.

இலங்கையின் தலை போல் அமைந்துள்ள, யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் பெரும் பகுதியை
இந்த மாவட்டம் உள்ளடக்கியுள்ளதுடன், தெற்கேயுள்ள பல தீவுகளும் இதனுள் அடங்கும்.

இத் தீபகற்பத்தினுள்ளிருக்கும், தொண்டமானாறு, உப்பாறு போன்ற கடல்நீரேரிகளால், இம்மாவட்டம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இப்பிரிவுகள், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி என அழைக்கப்படுகின்றன.

இம் மாவட்டத்தின் தெற்கு எல்லையில், யாழ்மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இருந்து 1984 பெப்ரவரியில் பிரிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் உள்ளது.

இலங்கையில் சமயங்கள்தொகுப்பு .

Lanka7:இலங்கையில் சமயங்கள்தொகுப்பு

2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி,
இலங்கையின் பிரதான மதங்கள் பௌத்தம் (70.19%), 
இந்துசமயம்(12.61%), 
இஸ்லாம் (9.71%)
கிறிஸ்தவம் (7.45%) (கத்தோலிக்க திருச்சபை 6%, சீர்திருத்தத் திருச்சபையினர் 1%) ஆகவும் உள்ளது.
 சிங்களவர்பெரும்பாலாக தேரவாத பௌத்ததைபின்பற்றுவதுடன், தமிழர்பெரும்பாலாக இந்து சமயிகளாகஉள்ளனர்.

இலங்கையில் இனங்கள் தொகை,

இலங்கையின் பெரும்பான்மைஇனத்தவர் சிங்களவர் ஆவார். இவர்கள் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 74.88% ஆக உள்ளனர்.

நாட்டின் அடுத்த முக்கிய இனத்தவராக தமிழர் உள்ளார்கள். நாட்டின் மக்கள் தொகையில் 15.37% ஆன இவர்கள், இலங்கை தமிழர்மற்றும் இந்தியத் தமிழர் என இரு பெரும் பிரிவினராகவுள்ளனர்.

 இலங்கைதமிழர் நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், இந்திய தமிழர் நாட்டின் மத்திய மாகாணம், பதுளை மாவட்டத்திலும், பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

இலங்கையின் இதர இனங்களாக சோனகர் (அரபிய வழிதோன்றல்கள் 9.23%), இலங்கை மலாயர் 0.2%, பறங்கியர் (ஐரோப்பிய வழிதோன்றல்கள் 0.18%), வேடர்கள்(காட்டு வாசிகள்) மற்றும் ஏனையோர் (0.14%) உள்ளனர்.

நள்ளிரவில் தேவைப்பட்டால் கூப்பிடுங்க வருகிறேன்.

சினிமா ;நள்ளிரவில் தேவைப்பட்டால் கூப்பிடுங்கள் நான் வருகிறேன் என நடிகர் ஒருவர் தன்னிடம் கூறியதாக ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே சொல்கிறார்கள். ஆனால் பாலிவுட்டில் உள்ளவர்களுக்கு இன்னும் அந்த துணிச்சல் வரவில்லை என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இது குறித்து மேலும் கூறியதாவது;
சினிமா துறையில் நடிகைகளுக்கு மட்டும் அல்ல நடிகர்களுக்கும் பாலியல் தொல்லை அளிக்கப்படுகிறது. அதனால் நடிகர்களும்இ நடிகைகளும் பயம் இல்லாமல் அது குறித்து வெளியே சொல்ல வேண்டும். அவ்வாறு தங்களுக்கு நேர்ந்த பிரச்சனை குறித்து பேசுபவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஆதரவு அளித்தால் தான் மற்றவர்களும் துணிந்து பேசுவார்கள்.
அண்மையில் எனக்கு நடந்த சம்பவம் பற்றி கூறுகிறேன். நான் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது எனது முதுகில் அடிபட்டது. படப்பிடிப்பு முடிந்ததும் நான் என் ஹோட்டல் அறைக்கு கிளம்பினேன். நான் சென்ற அதே லிஃப்ட்டில் என்னுடன் பணியாற்றிய நடிகரும் வந்தார். அவரும் அந்த படத்தில் பணியாற்றுகிறார் என்றாலும் நாங்கள் அவ்வளவாக பேசியது இல்லை.
எனக்கு முதுகில் காயம் ஏற்பட்டது அந்த நடிகருக்கு தெரியும். இந்நிலையில் நள்ளிரவில் உதவி தேவைப்பட்டால் என்னை கூப்பிடுங்கள். நான் வந்து முதுகை தடவி விடுகிறேன் என்றார். அந்த நடிகர் கூறியதை கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரும் நன்றாக பழகியதால் அந்த நபர் என்னிடம் சொன்னதை தயாரிப்பாளர், இயக்குனரிடம் தெரிவித்தேன்.
அவர்கள் அந்த நடிகரை அழைத்து பேசினார்கள். அந்த நடிகர் வளர்ந்த கலாச்சாரப்படி அவர் கூறியதில் உள்நோக்கம் இல்லை என்பதை பிறகு தான் தெரிந்து கொண்டேன். அவர் கூறியதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்ததை அவர் அப்போது உணரவில்லை. அதன் பிறகு அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்று ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்

#வவுனியாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட ஆசிரியை கைது!

இலங்கை, வவுனியா வவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை பொது மக்கள் இன்று (2018.09.17) 1.30 மணியளவில் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது செட்டிகுளம் பகுதியில் பாடசாலையில் பணியாற்றும் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஆசிரியர் ஒருவர் பாடசாலை முடிவுற்றதும் சகோதர மொழி பேசும் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் ஒருவரிடம் தொடர்ந்து பல நாட்களாக ஓரிணச்சேர்க்கையில் இருந்து வருவதாகவும் இதனை அப்பிரதேச மக்கள் நெடுநாட்களாக அவதானித்து உள்ளனர்.
இன்றைய தினமும் குறித்த ஆசிரியையும் மற்றைய பெண்ணும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பொழுது குறித்த இருவரையும் பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து நையப்புடைத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து குறித்த இருவர் மீதும் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டதில் குறித்த ஆசிரியை ஏனைய பெண் பலமுறை பலவந்தமாக ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
எனினும் பொலிஸார் குறித்த இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.
இதேவேளை இரு பெண்களின் தொடர்பு கடந்த 6மாதங்களுக்கு மேல் உள்ளது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வவுனியா நகரில் வசித்து வரும் குறித்த ஆசிரியை ஏற்கனவே தான் பணி புரிந்த பாடசாலை ஒன்றில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டதனால் அவர் மாற்றமடைந்தது தற்சமயம் செட்டிகுளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sunday, September 16, 2018

lanka7:இலங்கை தமிழர்களின் தொடர்ச்சியான சாதனைகள் - வெள்ளிப்பதக்கம் வென்ற கயல்விழி ஜெயபிரகாஷ்

சர்வதேச சிகையலங்காரப் போட்டியொன்றில் இலங்கையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் கயல்விழி ஜெயபிரகாஷ் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

 இலங்கையில் கயல்விழி அழகுக் கலை துறையில் மிகவும் பிரசித்தி பெற்றவர் என்பதுடன், அவர் பல்வேறுபட்ட சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தி வந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் குறித்த போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட கயல்விழிக்கு வெற்றிக்கான பரிசு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

 அத்துடன் இலங்கை சார்பில் பங்கேற்ற அவரின் இந்த சாதனைக்கான அடையாளமாக வெள்ளிப்பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

கல்யாணப் பரிசாக யாருமே கொடுக்காத பரிசைக் கொடுத்த நண்பன்

திருமணப் பரிசாக தம்பதிகளுக்கு எரிபொருளை வழங்கிய சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் கடலூர் பகுதியில் இரு தம்பதிகளின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று வந்தது.

அதன்போது மாப்பிள்ளையின் நண்பர் ஒருவர் மணமேடைக்கு விரைந்து சென்று 5 லீட்டர் எரிபொருளை வழங்கியுள்ளார். 

 அண்மைக் காலமாக அதிகரித்து வரும் எரிபொருளின் விலை அதிகரிப்பை எதிர்த்து, மக்களுக்கு விழிப்புணர்வை வழங்கும் நோக்கிலேயே குறித்த நபர் இவ்வாறு பரிசளித்துள்ளார்.

 இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்லாது, தற்போது இலங்கையிலும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

srilanka Actress Pooja Gauthami Umashankar,

Actress Pooja Gauthami Umashankar, Film actress
Latest photographic
Sinhala, Malayalam Tamil  Film Actress,